மீனவர்களுக்கும் நிதிஉதவி செய்த ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களோடு கடைசிவரை கலந்து கொண்டார்.
போரட்டக்காரர்களுக்கு தேவையான உணவுகளையும், மருத்துவ வசதிகளையும் தன் செலவில் உடனே செய்து கொடுத்தார்.
அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் கடைசி நேரத்தில் கண் திருஷ்டி பட்டது போல சில சம்பவங்கள் நடந்துவிட்டது.
ஒத்துழைப்பாக இருந்த காவல்துறைக்கு நன்றி சொல்லி, அவர்களோடு நாமும் சேர்ந்து மகிழ்ச்சியை வெளிபடுத்தும் நேரத்தில் ஏதேதோ நடந்துவிட்டது.
அமைதியான போரட்டத்தின் முடிவில் எங்களுக்கு ஆளுநரின் அறிக்கையை காட்டியிருந்தால் அமைதியாக போயிருந்திருப்போம்.
தன்னடக்கதோடு செயல்பட்டு முதல்வர் நிரந்தர சட்டம் கொண்டுவந்ததற்கும், பிரதமர் அவர்களுக்கும் அனைவரின் சார்பாக நேரில் சென்று நன்றி சொல்ல போகிறோம்.
சென்னையில் மீனவரின் கடைகள் கடும் சேதமடைந்ததால் அதை சரிசெய்ய எனது சார்பாக 10 லட்சம் ரூபாய்யை நிதியுதவியாக அளிக்கிறேன்.
அதை மாணவர்கள் மூலம் நான் கொடுக்கப்போகிறேன். நீங்களும் உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.
மெரினா கடற்கரையில் ஏதோ மாணவர்கள் கட்சி ஆரம்பிக்கப்போகிறார்களாமே. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.


EmoticonEmoticon