தமிழில் ஹீரோவாக ஒரு சில படங்கள் நடித்தவர் பிரசன்னா. தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறையவே அஞ்சாதே படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். பிறகு தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் அவர்.
சாய் தரண் தேஜ் நாயகனாக நடிக்கும் ”ஜவான்” படத்தில் வில்லனாக பிரசன்னா நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்ததுள்ளது. இதனை ஜவான் பட இயக்குனர் ரவியும் உறுதி செய்துள்ளார். நாகார்ஜூனா நடிப்பில் 2013ல் வெளிந்த “பாய்” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த பிரசன்னா, நான்கு வருட இடைவெளிக்கு பின்னர், மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கின்றார்.
ஏற்கனவே அவர் விஷால் நடித்துவரும் துப்பறிவாளன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முடிந்தவுடன் அவர் இந்த தெலுங்கு படத்தில் நடிக்க தொடங்குவார் என கூறப்படுகிறது.
EmoticonEmoticon